Sunday, February 27, 2011

இன்ப அதிர்ச்சி



      கடந்த வெள்ளிக்கிழமை மதியம் என்னுடைய மின்னஞ்சலை திறந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. திரு சீனா ஐயா அவர்கள் 28 ஆம் தேதி முதல் துவங்கும் வாரத்திற்கு என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். முதலில் பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு கூட நான் வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தேன். என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரி வந்த வாய்ப்பை ஏன் விடவேண்டும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.

     ஒத்துக்கொண்ட பின்பு தான் எனக்கு ஒருவித பயம். ஏனெனில் இதுவரை எழுதியவர்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இப்பொழுது எழுதி முடித்த நண்பன் பிரபாகரனும் பிரமாதமாக கலக்கி இருந்தார். நான் இதையெல்லாம் கெடுத்துவிடுவேனோ என்று ஒரு பயம். சரி எல்லா பாரத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்துள்ளேன்.

     ஆகையால் உங்களின் ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தவறுகளே அல்லது ஆலோசனைகளோ எதாவது  இருந்தால் சுட்டுக்காட்டவும். என் மின்னஞ்சல் முகவரி- tpari88@gmail.com
பி.கு:- வலைச்சரத்தில் எழுதுவதால் இந்த வாரம் நான் இங்கு எழுதமுடியுமா என்று தெரியவில்லை. ஆதலால் Operation ஆரியபட்டா அடுத்த திங்கள் முதல் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
பாரி தா


13 comments:

  1. வெற்றிகரமாக கலக்கவும் நண்பரே! எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. @! சிவகுமார் !...வருகைக்கும் நன்றி நண்பரே.... என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
  3. வாழ்த்துக்க‌ள் pari

    ReplyDelete
  4. // எல்லா பாரத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்துள்ளேன் //

    அவர்கிட்ட விட்டுட்டீங்களா... வெளங்கிடும்...

    ReplyDelete
  5. // எல்லா பாரத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டு எழுத ஆரம்பித்துள்ளேன் //

    //அவர்கிட்ட விட்டுட்டீங்களா... வெளங்கிடும்..//

    கண்டிப்பா நல்லதே நடக்கும். God is no where...God is now here!

    ReplyDelete
  6. ஆல் த பெஸ்ட் மக்கா வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.!!! கண்டிப்பாக எழுதணும் ஆமாம் சொல்லிபுட்டன்..

    http://kooranpathivu.blogspot.com/2011/02/blog-post_28.html

    ReplyDelete
  8. @jothi,Philosophy Prabhakaran,Lakshmi,MANO நாஞ்சில் மனோ....வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி...

    தொடர்ந்து வந்து ஆதரவு தரவும்

    ReplyDelete
  9. @Philosophy Prabhakaran.... எனக்கு கொஞ்சம் கடவுள் நம்பிக்கை உண்டு நண்பா....அதான்...

    ReplyDelete
  10. @! சிவகுமார் !..நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்....

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் பாரி

    ReplyDelete
  12. புதிய பொறுப்பேற்றுள்ள தங்கள் பணி சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.

    என்னை இன்று 3.3.2011 அன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன்,
    வை கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.com

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி