அனைவருக்கும் என்
இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு இது தான் என் முதல்
பதிவு. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. மேலும் நான் தங்கியுள்ள
இடமும் அலுவலகமும் சிறிது தொலைவாக உள்ளதால் அதுவும் ஒரு காரணமாகிவிட்டது. ஒரு வழியாக
நான் மீண்டும் இந்த பதிவை இடுகிறேன்.
நாம் பல நேரம்
பல பொருட்களை மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி அதை வாங்கி நாம் உபயோகித்துவிடுகிறோம்
ஆனால் அப்படி மலிவான பொருட்களால் பல பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை
நாம் மறந்து விடுகிறோம். நாம் அர்ப்பமாக நினைக்கும் பல பொருட்களால் நமக்கு தீங்குகள்
நேரிடும் என்பதை நாம் மற்ந்துவிடுகிறோம்.
அப்படியான ஒரு
பொருள் தான் காதுகளை சுத்தம் செய்ய நாம் உபயோகிக்கும் பட்ஸ்(Budds).
தேவையில்லாத போது
நாம் இது போன்ற பொருட்களை உபயோகிக்கக்கூடாது. சிலருக்கு பட்ஸை தொடர்ந்து உபயோகிக்க
பழகி அது இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலைமையை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள்.
இதை தொடர்ந்து உபயோகிக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் கூட சொல்லுகிறார்கள்.
ஆனாலும் நாம் அதை
எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து உபயோகிக்கிறோம்.
இரயில் நிலையங்களிலோ
பேருந்து நிலையங்களிலோ மலிவான விலையில் பட்ஸ் விற்கிறார்கள். அவர்களில் பெரும்பானவர்கள்
கண் தெரியாதவர்கள். நாமும் அவர்களைப்பார்த்து பரிதாபப்பட்டு அவர்களிடமிருந்து பட்ஸ்
வாங்கிவிடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த வேரு எதாவது பொருட்களை வாங்கலாம். ஆனால் பட்ஸ்
அல்ல. ஏனெனில் அது மருத்துவமைனைகளில் இருந்து வெளியே தூக்கி எரியப்படும் பஞ்சுகளை சுத்தம்
செய்து அதில் இருந்து உருவாக்கப்படுவதாக ஒரு செய்தி அறிக்கை சொல்கிறது. அவர்களுக்கு
உதவுவதகாக் நாம் நம்மை தண்டித்துக்கொள்கிறோம். மற்றவர்களுக்கு நாம் உதவலாம். அதுமும்
மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியமாக உதவலாம் ஆனால் அதனால் நமது உடலுக்கே தீங்கு வந்தால்
யோசிக்கவேண்டிய விசயம்.
அதனால் ஒரு பொருளை
வாங்கும் போது தன் விலையை விட அதன் தரம் மிகவும் முக்கியம்.
அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.