Friday, June 24, 2011

அழிந்து போன ஃபைல்களை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள்


பல நேரங்களில் நாம் மறாதியாக சில தேவையான ஃபைல்களை நம் கண்ணியில் இருந்து அழித்துவிடுவோம். அப்படி தெரியாமலோ, தேவை இல்லை என்று நாம் கருதி அழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் தான் ரெகுவா

இதை ஒருமுறை நம் கணிணி Install செய்துவிட்டால் போதும் அழித்த ஃபைல்களையோ ஃபோல்டர்களையோ திரும்ப எடுத்துவிடலாம். ஆனால் ஏற்கனவே இருந்த ஃபோல்டெரை அழித்து விட்டு வேறு ஒரு ஃபோல்டெரையோ ஃபைலையோ அங்கு சேமித்து வைத்திருந்தால் திரும்பப்பெருவது சிரமம் .

            இதை கண்ணியில் Install செய்வதும் உபயோகிப்பதும் மிகவும் எளிது.

உபயோகிக்கும் முறை:


முதல் படியாக தேவையான மொழியை தேர்ந்தெடுக்கவும்

அடுத்த தேவையான ஃபல் வகையை தேர்ந்தெடுக்கவும்




அடுத்து அந்த ஃபைல் அல்லது ஃபோல்டெர் இருந்த இடம் உங்களுக்கு தெரியுமானாலை அதற்கு ஏற்றார்போல் தேவையான option-ஐ தேர்ந்தெடுக்கவும்.





பிறகு மேலே உள்ளது போல ஒரு dialog box வரும். அதில் start அழுத்திவிட்டால் அதன் பிறகு process முடிந்து அழிந்து போன ஃபில் ஃபோல்டர்கள் ஒரு dialog box-இல் வரும். தேவையானவற்றை தேர்வு செய்து Recover என்னும் பொத்தானை அழுத்தினால் அழிந்து போனது திரும்ப வந்துவிடும்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய 


அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி



Friday, June 17, 2011

நான் அடித்த அரைசதம்


 
நானும் அரைசதம் அடிச்சுட்டேன். கிரிக்கெட்ல இல்லைங்க பதிவுலகத்துல. எப்படியோ நானும் நாற்பத்தி ஒன்பது பதிவு போட்டுட்டேன். இது என் ஐம்பதாவது பதிவு. அதான் அரைசதம் பதிவு இது. இத்தனை நாளா எனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி நன்றி நன்றி.

நானும் எதுவுமே தெரியாமல் அம்பது பதிவு போட்டுட்டேன். இப்ப கொஞ்ச நாளா internet connection இல்ல. அதனால பதிவு எதையும் போட முடியறதில்லை. இனி முடிந்த அளவுக்கு பதிவுகள் இட முயற்சி செய்கிறேன். நான் எழுதாத இந்த நேரங்களிலும் என்னைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்ட அன்பு சகோதரர் தம்பி கூர்மதியன் அவர்களுக்கும், Lashmi அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அப்புறம் நான் ஏன் எழுதறது இல்லைனு சொல்லி என்னை விசாரித்த வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் இந்த அம்பதாவது பதிவில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி சொல்ல நிறைய பேர் இருக்காங்க. நான் வலைபூவில் எழுதுவதற்கு முக்கிய காரணமான நண்பன் பிலாசபி பிரபாகர், அரசர்குளத்தான் கஸாலி அவர்கள், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள், என்னை வலைசரத்தில் அறிமுகம் செய்த எல்.கே அவர்கள் மற்றும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் பல.  என்னையும் மதித்து வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராக்கிய சீனா ஐயா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அப்படியே இன்னைக்கும் ஒரு பதிவை தேத்திட்டேன். விரைவில் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.
 
பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி