Monday, March 21, 2011

OPERATION ஆரியபட்டா இறுதி பாகம்




மேலும் விசாரித்த பொழுது  ராஜெஷுக்கு தெரியவந்த ஒரு விஷயம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது


அது தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட குழு தலைவர் திரு. திலிப் அவர்கள் கையில் மணிகட்டில் ஒரு தழும்பு உள்ளது என்னும் விஷயம். அதிர்ச்சியில் உறைந்தே போனது ஒட்டுமொத்த சி.பி.ஐ யும். எதற்காக அவர் அப்படி செய்தார். அப்பொழுதுதான் ஒரு விஷயம் ராஜேஷின் கண்ணுக்கு தெரிந்தது. தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட திலீபின் உடல் முற்றிலும் எரிந்து விட்டதால் அதை யாரும் சோதனை செய்யமுடியவில்லை. அங்கே இருந்த ஒரு கடிதத்தில் விண்கலம் வெடித்து விட்டதால் தன்னால் வருத்தம் தாங்க முடியவில்லை என்றும் அதனால் தான் தற்கொலை செய்து கொல்வதாகவும் எழுதியிருந்ததைக்கண்டு தான்  அது திரு திலீப் என்று அனைவரும் முடிவு செய்தார்கள்.

உடனே விரைந்து செயல் பட்ட ராஜேஷ், விண்கலம் வெடித்த அந்த கால கட்டத்தில் அதாவது திலீப் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு போன அனைவரையும் விமானதளத்தில் வைக்கப்பட்டிருந்த காமிராவில் பதிவான வீடியோவில் சோதனை செய்தார். அப்பொழுது அதில் திரு திலீப்பின் உருவம் தெரியவர அவர் அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

மேலும் விசாரனையில் அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளது தெரியவர அங்குள்ள காவலர்கள் உதவியுடன் திலீப்பை கைது செய்தார்கள். இந்த செயலை செய்ய அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. தான் இறந்து விட்டது போல ஒரு மாயையை உருவாக்கி ஆஸ்திரேலியாவில் வந்து தங்கி சந்தோஷமாக இருக்க நினைத்தார். இது போல விசாரனை வராமல் இருக்க திலிப்பே கணித வல்லுநர் திரு சாமியின் பெயரில் பல கோடி மதிப்புள்ள சொத்தை அமரிக்காவில் வாங்கியுள்ளார். உண்மை குற்றவாளி பிடிபட்டவுடன் சிறையில் இருந்து கணித வல்லுநர் திரு சாமி அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.

சிறப்பாக செயல் பட்ட சி.பி.ஐ அதிகாரி திரு. ராஜேஷ் அவர்கள் இந்திய அரசால் கவுரவிக்கப்பட்டார். மேலும் திரு சாமி அவர்களிடம் இந்திய அரசும், ஓய்வு பெற்ற நீதிபதியும் தண்டனை தந்தவருமான திரு ராதாராமன் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தனர்.

இத்துடன் இந்த கதை முடிந்தது.
        *********************************************************************************************

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி

முந்தைய பதிவு
55 தொகுதி கொடுத்தாலும் வேண்டாம்...




படிச்சிட்டு சும்மா போன எப்படி....அப்படியே உங்க ஓட்ட போட்டுட்டு போங்க....கருத்தும் சொல்லுங்க.....



12 comments:

  1. இனிமையாக முடிந்தது... தொடர் அருமை..

    ReplyDelete
  2. @!* வேடந்தாங்கல் - கருன் *!..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete
  3. நல்லா முடிஞ்சுச்சு... அடுத்து என்ன?



    எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

    ReplyDelete
  4. படித்தேன்...சுவாரசியம்...முந்தைய பாகங்களை படித்துக் கொண்டு இருக்கிறேன்...

    ReplyDelete
  5. பகிர்தலுக்கு நன்றி பாஸ்

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  7. சரியான முடிவு. நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. டும்டும்...டும்டும்...

    அடுத்த கதையை விரைவில் தொடங்குங்கள்...

    ReplyDelete
  10. @தமிழ்வாசி - பிரகாஷ்,டக்கால்டி,விக்கி உலகம்,Lakshmi,பாலா,நையாண்டி மேளம்...தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  11. Good One.. It was not easy to predict.. Expecting the next one soon!

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி