Wednesday, March 9, 2011

OPERATION ஆரியபட்டா பாகம் 2


முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும்
சென்ற பாக தொடர்ச்சி.....
விண்கலம் வெடித்து சிதறியது. ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்தது. பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். என்ன பயன் முடிந்தது முடிந்து விட்டது. அதை மாற்றமுடியாது. அந்த விண்கலத்தை தயார் செய்த குழுவின் தலைவர் அதிர்ச்சியில் எண்ணை ஊற்றி தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். இது மேலும் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது. உலக நாடுகள் வாயலவில் வருத்தம் தெரிவித்துவிட்டு தங்களுக்குள் கொண்டாடினார்கள்.
   

இந்திய அரசு இதைப்பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி திரு ராதாராமன் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 20 ஆயிரம் கோடி ரூபாய், 12 வீரர்கள், ஒரு விஞ்ஞானி ஆக இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. விசாரனையை விரைவில் முடிக்க இந்திய அரசு அந்த குழுவை வற்புறுத்தியது. அவர்களும் விசாரனையை வேகப்படுத்தினார்கள்.

அப்பொழுது விசாரனையில் அவர்கள் விண்கலம் செய்ததில் தவறு நடந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்கள். மேலும் விசாரனையில் அவர்கள் செய்தபொழுது விண்வெளியில் இருந்து அந்த வீரர்கள் சாகும் முன் இந்தியாவில் இருந்த குழுவுடன் பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் விண்கலத்தில் திடீரென சத்தம் வரத்துவங்கியதாக கூறியது பதிவாகி இருந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது.

அவர்கள் சொன்னதை விசாரிக்க ஆரம்பித்ததில் அதில் உள்ள சில பகுதிகளை(PARTS) தயார் செய்ததில் தவறு இருக்குமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. மேலும் இதில் வெளிநாட்டு சதி இருக்குமோ என்னும் சந்தேகமும் வந்தது அந்த குழுவிற்கு.

விசாரனையில் விண்கலத்தை தயார் செய்ய கொடுத்த அந்த விண்விளியின் வரை படத்தை சோதனை செய்தார்கள். அப்பொழுது அதில் சில இடங்களில் கணக்கீடுதல் (calculation) தவறுதலாக நடந்துள்ளது கண்டுபிடிக்கப்படுகிறது. அதைப்பற்றி அந்த உருவாக்கும் குழுவில் இருந்த கணித வல்லுனருடன் விசாரைனை மேற்கொள்ளப்படுகிறது. அவர் தான் அந்த தவறு செய்யவில்லை எனறு கூறுகிறார்.

விசாரனையில் அவருடைய பெயரில் அமரிக்காவில் 100கோடி மதிப்புள்ள ஒரு சொத்து சமீபத்தில் அவருடைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது தெரியவருகிறது. அதைக்கேட்டு அந்த கணித வல்லுநர் அதிர்ச்சியாகிறார். அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார். மேலும் சில ஆவனங்கள் அவருக்கு எதிராக இருக்க அவர் தான் தவறு செய்தார் என்று குற்றம் சாட்டி அவருக்கு தேச துரோகத்திற்காக தூக்கு தண்டனை அளிக்கப்படுகிறது

ஆனால் தான் அந்த குற்றம் செய்யவில்லை என்று அவர் கூறுகிறார். தனக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் அதிர்ச்சியாயிருந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது.


                                              தொடரும்

                                  அன்புடன் 

                             பாரி தாண்டவமூர்த்தி


பிடித்திருந்தால் ஓட்டு போடவும். அப்படியே உங்க கருத்தையும் சொல்லிவிட்டு போங்க......

9 comments:

  1. ஹா ஹா ஹா தொடருங்க தொடருங்க....

    ReplyDelete
  2. நல்லா விரமாகச்சொல்லி வரீங்க. தொடtருங்க.

    ReplyDelete
  3. நீங்கள் தொகுத்திருக்கும் விதம் உண்மை நிகழ்வு போல் இருக்கிறது! அருமை. முதல் பாகம் வாசித்த பின்பு தான் உண்மை தெரிய வந்தது! சுவாரசியமாக இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  4. அதிர்ச்சியுடன் முடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  5. hi.thanks for making a note on me in valaisaram

    ReplyDelete
  6. @MANO நாஞ்சில் மனோ ....வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....கல்லூரியில் தேர்வு நடப்பதால் காலதாமதம்/....

    ReplyDelete
  7. @Lakshmi ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

    ReplyDelete
  8. @ஞாஞளஙலாழன்...வருகைக்கு கருத்திற்கும் நன்றி.,..தொடர்ந்து வாருங்கள்.....

    ReplyDelete
  9. @"குறட்டை " புலி ......வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....

    ReplyDelete

பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி