Friday, December 23, 2011

எனக்கு ஆச்சரியமூட்டிய செய்தி


எனக்கு ஆச்சரியமூட்டிய செய்தி:

நான் வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் இனையதளத்தில் அன்றைய செய்திகளை படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான் நான் கீழ்வரும் செய்தியை கண்டேன்.

சரி அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று தான் இந்த பதிவு.

**********************************************************************************

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
 இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை உருவாக்கிய நம் முன்னேர்கள் அதிபுத்திசாலிகளே...

**********************************************************************************

மேலே உள்ள செய்தி நான் இனையதளத்தில் படித்தது.

அன்புடன்

பாரி தாண்டவமூர்த்தி.

Thursday, December 1, 2011

அன்புள்ள நண்பர்களுக்கு



அன்புள்ள நண்பர்களுக்கு,



அனைவருக்கும் என் இனிய காலைவணக்கம். அனைவரும் நலம் தானே. வேலை பளுகாரணமாக என்னால் இத்தனை நாள் எழுத முடியவில்லை. வேலை புதிது மற்றும் வேலைக்கு நான் புதிது ஆகிய இரண்டு காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போய்விட்டது. இப்பொழுது  தான் வேலை கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டதால் இனி முடிந்த வரை மீண்டும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

வேலைக்கு சேரும் முன் ”எப்படா வேலைக்கு சேரப்போகிறோம் என்று தான் எப்பொழுதும் எண்ணம் இருக்கும். வீட்டுல இருக்குறவங்க சும்மா இருந்தாலும் பக்கத்துவீட்டுல எதிர்வீட்டுல இருக்குறவங்களாம் ”என்னப்பா இன்னமும் வேலைக்கு போகலனு கேக்கும் போதெல்லாம் ’பப்பி ஷேமா’ இருக்கும், மானம் போகும். இப்பொழுது எப்படா வேலை முடியும், வீட்டுக்கு போகலாம் என்னும் எண்ணம் வந்துவிட்டது. சரி புதியவன் என்பதால் வேலை பழக நேரம் எடுக்கும் அதுவரைக்கும் கொஞ்சம் சிரமம் தான்.

நான் எழுதாத நேரத்திலும் என்னை நினைவில் கொண்டு சில நண்பர்கள் ஏன் எழுதுவதில்லை என்று என்னிடம் விசாரித்தார்கள். அவர்களுக்கு என் நன்றிகள் பல. இபோதைக்கு இத்துடன் முடிக்கிறேன். மீண்டும் உங்களை அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
பாரி தாண்டவமூர்த்தி.   


பச்சைத்தமிழனை காண வந்து கருத்தும் ஓட்டும் அளித்த உங்களுக்கு நன்றி